Saturday, August 15, 2009

சுதந்திரம் என்னும் மரம்...


தன் குருதி தோய்ந்த தேசிய கொடியை
உயிராய் மதித்து
உயரப்பிடித்து கூவினான் அன்று
இந்தியன் வந்தே மாதிரத்தை

அன்று அவன் குருதியால் விளைந்து
உயிர் கொண்டு காத்த
சுதந்திரமரத்தின் கனிதன்னை
இன்று நாம் நோவாது சுவைக்கிறோம்
வாய்தன்னில்
இந்தியன் என கூவிக்கொண்டு

மரத்தை நட்டோரையும் காத்தோரையும்
சுதந்திர தினம் தவிர
மற்ற நாள்தனில்
நன்றியோடு நினைத்திடவும் இல்லை,

அம்மரத்திற்கு நீர் ஊற்ற
யத்தனிக்கவும் இல்லை,
காத்து நிற்க சிந்திக்கவும் இல்லை

நாளை நம் பிள்ளைகள்
களைப்பாறி பசியாற
இச்சுதந்திர மரம்
கிளையோடும் கனியோடும்
செழித்து நிற்குமோ...
இல்லை காய்ந்த சருகாய்
உலர்ந்து மடியுமோ......

வந்தே மாதரம்!


I love you India




salute our flag, salute our nation





unity in diversity, thats INDIA
Jai Hind!


இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
வந்தே மாதரம்!

Sunday, May 24, 2009

பூவானப் பந்தலிலே - 2


"உங்களை எல்லாம் திருத்தவே முடியாது, உங்க பணவெறியால என் வாழ்க்கைய வீணாக்கிட்டிங்க இப்ப சந்தோஷமா? " என்று ராஜதுரையிடம் கர்ஜித்துவிட்டு விருட்டென தன் அறைக்குள் சென்றுவிட்டான் வினோத்.

"நான் என்னமோ கல்யாணத்தை நிறுத்தினமாதிரி கத்திட்டு போறான் இவன்; அந்த பொண்ணுதான இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு போச்சு.." என்று எந்த தவறுமே செய்யாதவர்போல் பேசினார் ராஜதுரை.

"அந்த பொண்ணு ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்லுது? நீங்க வரதட்சனை ஒரு பைசாகூட வேண்டாம்னு சொல்லுங்க, அந்த பொண்ணுகிட்ட நான் பேசி இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறேன்" என்று இரு குடும்பத்திற்கும் இடையே பாலம் கட்டும் முயற்சியில் இறங்கினான் வினோத்தின் அக்கா கணவன் திவாகர்.

"அதெப்படி மாப்பிள்ளை வருகிற மகாலட்சுமியை(வரதட்சனை) வேண்டாம்னு சொல்லுறது? வேணும்னா அந்த ஐந்து லட்சம் பணத்தை அவுங்க சொன்ன மாதிரி ஒரு வாரம் கழிச்சு தரட்டும் பிரச்சனை இல்லை" என்று விட்டுக்கொடுத்து போகும் மாமனிதர்போல் பேசினார் ராஜதுரை.

"செ... இந்த மனுஷன் புத்தி மாறவே மாறாது.." என்று கூறிவிட்டு தன் கணவனை எண்ணி நொந்தவாறே அவ்விடத்தை விட்டு நீங்கினார் ரேனுகா.

"நாங்க எல்லாம் இவ்வளவு சொல்லியும் உங்க மனசு மாறலைனா இதுக்கு மேல ஒன்னும் பண்ண முடியாது.
சரி இந்த விஷயமெல்லாம் எனக்கு எதுக்கு? என் விஷயத்துக்கு வருவோம்; ஏழு வருஷத்துக்கு முன்னாடி உங்க பொண்ணுக்கு நீங்க முப்பது பவுண் நகை போட்டதாதான் எனக்கு நியாபகம். நீங்க மட்டும் உங்க பையனுக்கு இவ்வளவு வரதட்சனை கேட்கறிங்க, அப்ப நான் மட்டும் என்ன இளிச்சவாயா? என் பொண்டாட்டிக்கு இன்னும் ஒரு 40 சவரண் போட்டு என் வீட்டில் கொண்டுவந்துவிடுங்க, இல்லாட்டி நீங்களே வச்சுக்கங்க" என்று ராஜதுரையின் தலையில் மின்னாது இடியை இறக்கிவிட்டுச் சென்றான் திவாகர்.

அந்த மண்டபத்தில் அன்றிறவு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.

கணேசனை பேசவேண்டும் என்று தனியே அழைத்த வினோத் "மாமா நாளை காலை குறிச்ச முகூர்த்தத்துல எங்க அப்பா ஒத்துகிட்டாலும் ஒத்துகாட்டியும் ஸ்வேத்தா கழுத்துல நான் தாலி கட்றேன். எனக்கு யார் சம்மதமும் வேண்டாம், ஸ்வேத்தாவோட சம்மதத்த மட்டும் கேட்டுச் சொல்லுங்க" என்றான்.

"அவள சமாதானப்படுத்ததான் நாங்க எல்லாம் முயற்சி பண்ணிட்டு இருக்கோம் மாப்பிள்ளை...ஆனா அவ பிடிவாதமா இருக்கா. முதல்ல நீங்க உங்க அப்பாவ சம்மதிக்க வையுங்க, பெரியவங்க சம்மதம் முக்கியம். ஸ்வேத்தாவ நாங்க பாத்துக்கிறோம்...அவ கொஞ்சம் பிடிவாதக்காரிதான் ஆனா புத்திசாலி பொண்ணு...எடுத்து சொன்னா உங்கள அவ புரிஞ்சிக்குவா" என்று கூறிவிட்டு தன் அருமை மகளின் திருமணத்தில் நடக்கின்ற தடங்களை எண்ணி நெஞ்சு நிறைய வருத்தத்துடன் சென்றார் அத்தந்தை.
-------------------------------------------------------------------------

அனைவரும் கொடுத்துச்சென்ற தனிமையில் அமர்ந்து யோசித்த ராஜதுரை ஒரு முடிவுக்கு வந்தவராய் தன் மருமகன் திவாகரனை தேடிச்சென்றார்.
"மாப்பிள்ளை என்னை மண்ணித்துவிடுங்கள். பெண்வீட்டாரின் நிலையில் நீங்க என்னை நிறுத்தின பிறகுதான் எனக்கு அவர்களுடைய வலி வருத்தம் என்னன்னு புரிகிறது. வரதட்சனை வாங்குவது தவறுனு நான் உணர்ந்துவிட்டேன். என் வீட்டிற்கு மகாலட்சுமிபோல ஒரு மருமகள் வந்தா அது போது எனக்கு, பணங்காசு கொண்டுவர வேண்டாம், நல்ல குணத்தை கொண்டு வந்தா போதும்" என்று மனம் திருந்தியவராய் ராஜதுரை மண்ணிப்பு கோர,


"என்னிடம் ஏன் மண்ணிப்பு கேட்கறிங்க..பொண்ணுடைய அப்பாகிட்ட மண்ணிப்பு கேளுங்க மாமா.அதுக்குள்ள நான் முறுக்கிகிட்டு போன உங்க மகன்கிட்ட விஷயத்த சொல்லி அவனை சமாதானம் சொய்றேன்" என்றான் திவாகரன்.
"செய்யுங்க மாப்பிள்ளை; அவனிடமும் நான் மண்ணிப்பு கேட்டதா சொல்லுங்க" என்று கூறிவிட்டு கணேசனை பார்க்க சென்றார் அவர்.
-----------------------------------------------------------
"இல்ல மாமா, எங்க அப்பா எவ்வளவுதான் மண்ணிப்பு கேட்டாலும் அவரை என்னால் மண்ணிக்க முடியாது. நான் இனிமேல் அவரிடம் பேசபோறதும் இல்லை,நாளை திருமணத்தின் போதும் அவருக்கு நான் பாதபூஜை பண்ணமாட்டேன்" என்று திவாகரனிடம் கூறினான் வினோத்.
"அப்படி சொல்லாத வினோத். அவுங்க அந்த காலத்து மனுஷங்க, பழசுலையே ஊரிப்போனவங்க; அவுங்கள பொருத்த வரைக்கும் வரதட்சனை எல்லாம் பெரிய தப்பே இல்லை. ஆனா இந்த காலத்து இளைஞர்களான நாம்தான் இவர்களுக்கு புரிகிறமாதிரி எடுத்து சொல்லி திருத்தனும். அதைவிட்டுட்டு அவர்களை ஒதுக்கக் கூடாது. இப்பதான் உங்க அப்பா அவர் தவறை உணர்ந்துவிட்டாரே பிறகென்ன? இப்ப அவரை மண்ணிப்பதுதான் நியாயம்." என்று கூறிய திவாகரனின் அறிவுரையை ஏற்ற வினோத்,
" நீங்க சொல்வதுதான் சரினு எனக்கும் படுது மாமா.."என்றான்.
"அப்புறம் என்னப்பா? போ...போய் உன் ஆளை முதல்ல சமாதானப்படுத்து"என்று ஒரு நமுட்டு சிரிப்போடு கூறினான் திவாகர்.
சந்தோஷ புன்னகையோடு அவ்விடம் நீங்கி தன் தேவதையிடம் சென்றான் வினோத்.
--------------------------------------------------------
"ஸ்வேத்தா, வினோத்த புரிஞ்சிக்க முயற்சிபண்ணாம இப்படி பிடிவாதம் பிடிக்கிறது நல்லதுக்கில்லை; சரி இதுக்கு பதில் சொல்லு, வினோத் அப்பா இப்படி வரதட்சனை கேட்டதால்தான் இவ்வளவு நகை, கார் எல்லாம் உங்க அப்பா செய்கிறார்னு உனக்கு முன்னாடியே தெரியுமா?" என்றாள் ஸ்வேத்தாவின் தோழி மீனா.
"தெரியாது; எதுக்குப்பா இவ்வளவு செய்யறிங்கனு நான் கேட்டப்ப, என் ஒரே மகளுக்கு என் ஆசை தீர செய்து அழகுபார்கிறேன்னு சொல்லி என் வாயை அடச்சிட்டாரு என் அப்பா" என்று ஸ்வேத்தா கூற,
"உனக்கு எப்படி தெரியாதோ அதேபோல வினோத்துக்கும் தெரியாம இருந்திருக்கலாம் இல்லையா?" என்று வினவினாள் மீனா
".........."
"நல்லா யோசிடி, வினோத் நல்லவர்னு எனக்கு தோனுது. இப்ப அவர் அப்பாவும் தன் தவறை உணரந்துவிட்டார். பிறகு கல்யாணத்துக்கு சம்மதிக்க உனக்கு என்ன?" என்று மீனா கூற அதே நேரம் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
"ஸ்வேத்தா, உன்கிட்ட கொஞ்சம் பேசனும்" என்றான் வினோத்.
இங்கிதம் தெரிந்து மீனா விலக வினோத் பேச ஆரம்பித்தான்.
"ஸ்வேத்தா, first of all Iam sorry, எங்க அப்பா பண்ணினது எதுவும் எனக்கு தெரியாது, believe me" என்றான்
"........."
"ஸ்வேத்தா please, try to understand me; உன்ன மனப்பூர்வமா நான் நேசிக்கிறேன். எனக்கு பணம் காசு முக்கியமில்லை. கட்டின புடவையோடு நீ வந்தா போதும், உன்ன வச்சு காப்பாத்த என்னால முடியும். Tell me swetha, will you marry me? " என்று தன் கையை அவள் எதிரே நீட்டினான்.
"உம்...... " என்று வெட்க்கப் புன்னகையோடு தன் செங்கார்ந்தல் விரல்களை அவனது விரிந்த கைமீது வைக்க, அவனோ தன் சட்டை பையிலிருந்து அவர்கள் நிச்சிய மோதிரத்தை எடுத்து அவள் விரலில் அணிவித்தான்.


"உன் புன்னகை செல்வத்தை

என் மன வங்கியில் சேமித்து

நல்லதோர் இல்லறம்

வாங்கிடுவேன் கண்ணே"
என்று மௌனக் கவிதை வாசித்தது அவன் உள்ளம்

நாணத்தோடு தன் கையை அவன் பிடியிலிருந்து விலக்கிக்கொண்டு " சாரி, உங்களை தவறா நினைச்சுட்டேன்" என்றாள் ஸ்வேத்தா.
"Thats ok...ஆனாலும் பயமாதான் இருக்கு"
"எதுக்கு? "
"இப்படி ஒரு கோபக்கார புறட்சிப் பெண்ணோடு வாழ்க்கை பூரா நான் எப்படி குப்பக்கொட்டப் போறேனோனுதான்........"என்று வருத்தம் மிக்க குரலில் வினோத் கூறியதை கேட்டு அவள் பொய் கோபத்தோடு முறைக்க...,
அவனோ உல்லாசமாக சிரித்தான்.


----------------------------முற்றும்------------------------

Thursday, May 21, 2009

பூவானப் பந்தலிலே - 1





நாளை கல்யாண வைபவம் நடைபெறப்போகும் அடையாளங்களோடு வீற்றிருக்கும் அந்த கல்யாண மண்டபத்தின் மேல் தளத்தில் மணப்பெண், மணமகன் அறைகளுக்கு எதிரில் உள்ள வராண்டாவில் இருவருக்கிடையே ஒரு சம்பாஷனை....

"என்ன சம்பந்தி ரொக்கப்பணம் ரெடியா ? இப்பவே கொடுத்தீங்கனா கொஞ்சம் உபயோகமா இருக்கும் " என்றார் மணமகனுடைய தந்தை ராஜதுரை.


"அது வந்து சம்பந்தி ,நீங்க கேட்ட 75 பவுண் நகை, டாடா இன்டிகா காரு எல்லாம் ரெடி, ஆனா பாருங்க இந்த 5 லட்சம் பணம் மட்டும் வரவேண்டிய இடத்திலிருந்து இன்னும் வரலை. தரவேண்டிய ஆளு இழுத்தடிக்கிறான். ஒரு.. ஒரு வாரம் டைம் கொடுத்தீங்கனா சொன்னபடி பணத்தை கொடுத்திடுவேன். நானே இதை பத்தி உங்க கிட்ட பேசனும்னு இருந்தேன் ஆனா அதுக்குள்ள நீங்களே கேட்டுட்டிங்க" என்று குரல் குழைய சற்று பம்மியவாரு கூறினார் மணமகளின் தந்தை கணேசன்.

"என்னங்க இப்படி சொல்லுறிங்க, அன்னைக்கே நான் என்ன சொன்னேன்? நகை, கார் பொருமையா கொடுத்தாலும் பணம் கல்யாணத்துக்கு முதல் நாளே கரைக்டா வந்துடனும்னு சொன்னேனுல்ல. நீங்க 5 லட்சம் பணம் தருவதா சொன்னதாலதான் கல்யாண செலவு முழுக்க நாங்க ஏத்துகிட்டோம். இத நம்பி நான் பணத்துக்கு வேறு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. இப்படி தரேன் தரேன்னு மண்டைய ஆட்டிட்டு கடைசியில வந்து கைய விரிக்கறிங்க. கொடுத்த வாக்க காப்பாத்துறது இல்லையா?" என்று மாப்பிள்ளையை பெற்றவர் தன் வீறாப்பைகாட்டினார்.

"ஐயோ சம்பந்தி, சத்தம் போடாதீங்க...என் பொண்ணுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாது, அவ காதுல விழுந்துடபோகுது. உங்கள ஏம்மாற்றனும்கிற எண்ணமெல்லாம் எனக்கில்லைங்க, ஓரே வாரத்துல சொன்னபடி கரைக்டா கொடுத்துடறேன் கொஞ்சம் பொறுத்துக்கோங்க." என்றார் கணேசன்.

இப்பேச்சு பறிமாற்றல் மணமகள் மற்றும் மணமகன் அறையில் இருந்த அனைவரின் காதிலும் வழுந்தது.

இந்த சம்பாஷனையை கேட்டு அதிர்ந்து எழுந்த தன்னை கையை பிடித்து, அமரும்படி சைகை செய்த தோழி மீனாவை பொருட்படுத்தாது அறையைவிட்டு வெளியே வந்தாள் மணப்பெண் ஸ்வேத்தா .

" கராரா பேசறேன்னு நினைக்க வேண்டாம், நகையில ஒன்னு இரண்டு குறஞ்சா பொருமையா தாங்க பரவாயில்லை...ஆனா பணம் எனக்கு நாளை காலையில முழுசா வேண்டும்" என்றார் ராஜதுறை பிடிவாதமாக.

இதற்குள் வெளியே வந்த ஸ்வேத்தா " ஒரு நமிஷம், எதற்காக எங்க அப்பா உங்களுக்கு பணம் தரனும்னு நான் தெரிஞ்சுக்கலாமா? " என்றாள்
"ஸ்வேத்தா, இதுல உனக்கு பேச்சில்லை; உள்ள போ" என்ற தந்தையையும்,
"உள்ள வாடி" என்ற தாயின் அதட்டலையும் அசட்டை செய்துவிட்டு பதிலுக்காக காத்திருந்த ஸ்வேத்தாவிடம்,
"ஓ தாராளமாய் தெரிஞ்சுக்கலாமே, உன் கல்யாணத்துக்கு வரதட்சனையாக ஐந்து லட்சரூபாய் உன் அப்பா தருவதாய் ஒப்புக்கொண்டார். அந்த பணத்தைதான் நான் கேட்டேன்" என்று அலட்சியமாய் பதிலலித்தார் ராஜதுரை.

"இப்படி வரதட்சனை கேட்க உங்களுக்கு வெட்கமாய் இல்லை? " என்று கேட்ட ஸ்வேத்தாவை,
"வாயை மூடிகிட்டு உள்ள வாடி" என்று தாய் மஞ்சுளா அதட்டுகையிலேயே மணமகன் வினோத்தும் அவன் தாய் ரேனுகாவும் வந்தனர்.
தன்னை விரட்டிய தாயை முறைத்துவிட்டு "சும்மா இரும்மா, எல்லாம் உங்களை சொல்லனும்".
"அப்பா, என் கல்யாண பேச்செடுத்தப்ப உங்க கிட்ட நான் என்ன சொன்னேன்? வரதட்சனை கேட்கிற மாப்பிள்ளையை நான் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு சொன்னேனா இல்லையா? அப்புறம் ஏன்பா இப்படி பண்ணீங்க? அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும்; வரதட்சனை வாங்கும் மாப்பிள்ளை எனக்கு வேண்டாம்" என்று கூறிவிட்டு நேரே வினோத்திடம் சென்று தன் கையில் அவன் அணிவித்த நிச்சிய மோதிரத்தை கழற்றி அவன் கையில் கொடுத்தாள்.

அதுவரை நடப்பதை கண்டு அதிர்ந்துபோய் இருந்த வினோத் "ஸ்வேத்தா, அவசர படாத, இது எதுவுமே எனக்கு தெரியாது.. தெரிஞ்சிருந்தா இவ்வளவு தூரம் விட்டிருக்க மாட்டேன்.பெரியவங்க பண்ண தப்புனால நம்ம வாழ்க்கை பாதிக்கப்பட கூடாது" என்று சொல்லவும்
"ஓஹோ..இந்த கதைய நான் நம்பனுமா? அதெப்படி உங்களுக்கு தெரியாம இருக்கும்? அம்மா அப்பா பொண்ணு வீட்டிலிருந்து எவ்வளவு பிடுங்கறாங்களோ பிடுங்கட்டும்.. நாம ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்கலாம். வரதட்சனை கேளுங்க என்றும் சொல்ல வேண்டாம் கேட்காதீங்க என்றும் சொல்ல வேண்டாம்; நாளைக்கு ஏதேனும் பிரச்சனைனா எனக்கு எதுவும் தெரியாது, எல்லாம் எங்க அம்மா அப்பா பண்ணினது, நான் என்ன செய்வேன்னு சொல்லி தப்பிச்சுக்கலாம்.. இதுதானே இன்றைய இளைஞர்களின் மனநிலை. இதுகூட தெரியாத முட்டாளா நாங்க? " என்று பொரிந்து தள்ளிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாள்.

"ஏம்பா இப்படி எல்லாம் பண்றீங்க? நான் ஒன்றும் முடமோ குருடோ இல்லை. என் சம்பாத்தியத்துல என் போண்டாட்டிய வச்சு காப்பாத்த எனக்குத் தெரியும்; நீங்க ஒன்னும் எனக்கு சொத்து சேர்க்கத் தேவையில்லை" என்று தந்தையிடம் மல்லுக்குச் சென்றான் வினோத்.

இதற்குள் அறைக்குச் சென்ற ஸ்வேத்தாவை சமாதானம் செய்ய முயன்றனர் கணேசனும் மஞ்சுளாவும்.
"உனக்கு செல்லம் கொடுத்து வளர்த்தது ரொம்ப தப்பாபோச்சுடி; கொஞ்சம்கூட நெஞ்சுல பயம் இல்லாம என்ன வார்த்தை சொல்லிட்டு வந்திருக்க.." என்று மகளை திட்டினாள் தாய் மஞ்சுளா.
"ஏம்மா, நானே பத்திரிக்கையில வரதட்சனை வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாதுனு கட்டுரை எல்லாம் எழுதுகிறேன் அப்புறம் என் கல்யாணமே இப்படி வரதட்சனை கொடுத்து பண்ணா எப்படிம்மா.... முடியாது என் கொள்கையிலிருந்து நான் மாறமாட்டேன். என்ன விட்டுடுங்க" என்றாள் ஸ்வேத்தா.

இதை கேட்டுக்கொண்டே உள்ளே வந்த வினோத்தின் தாய் ரேனுகா ஸ்வேத்தாவிடம் "நிஜமாவே அவனுக்கு எதுவும் தெரியாதுமா. இவருதான் இப்படி கிறுக்குத்தனம் பண்ணிட்டாரு..நான் எவ்வளவோ சொல்லியும் அவரு கேட்கலை. அவரு பண்ண தவறுக்காக உன்னை உயிரா விரும்புகிற வினோத்தை தண்டிச்சிடாதமா" என்று மகனுக்காக மண்றாடினாள்.
"ஆன்டி ப்லீஸ், இது முடிஞ்சு போன கதை, இனியும் என்கிட்ட இது பத்தி எதுவும் பேசாதீங்க " என்று அவள் பட்டென கூறிவிட வருத்தத்துடன் வெளியேறினாள் அந்தத் தாய்.

ஸ்வேத்தா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறாள்; ஓரளவு வசதியான உயர் நடுத்தர குடும்பம். முற்போக்கு சிந்தனை உள்ளவள்.ஓரு வார இதழில் அவ்வபோது அவளுடைய படைப்புகள் வெளிவருவதுண்டு. ஒரு திருமணத்தில் அவளை பார்த்த வினோத் கண்டதும் காதல் கொண்டு, அவளை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டபின் தாய் தந்தையோடு சென்று பெண் கேட்டு நிச்சையித்த திருமணம் இது.
வினோத் ஒரு அரசு சார்ந்த நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்தோடு உயர் பதவியில் உள்ளமையால் ஸ்வேதா குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு இக்கல்யாணத்திற்கு சம்மதித்திருந்தனர்.

"ஸ்வேத்தா, நம்மால முடியுது கொடுக்கிறோம், இதில் என்ன தப்பிருக்கு? இந்த ஐந்து லட்சம் பணம்கூட ஒரு வாரத்துல வந்துவிடும். வரவேண்டிய பணம்தான், கொஞ்சம் தாமதம் ஆகிடுச்சு. மாப்பிள்ளை வீட்டுக்கரங்ககிட்ட எடுத்துச்சொன்னா அவங்க புரிஞ்சுக்குவாங்க...இதுக்கு போய் கல்யாணத்த நிருத்துங்கனு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டியேமா.." என்றார் கணேசன்.
"நம்மால முடியுதுனு கொடுக்குறோம், முடியாதவங்க என்னப்பா பண்ணுவாங்க?
வரதட்சனை கொடுக்க முடியாதவங்களுக்கு எல்லாம் நல்ல இடத்துல கல்யாணமே நடக்காதா?
கொடுக்கிறவங்க கொடுத்துகிட்டிருந்தா, வாங்கறவங்க வாங்கிட்டுதான் இருப்பாங்க
இருக்கப்பட்டவங்களா இருந்தாலும் வரதட்சனை கொடுக்கக்கூடாது அப்பதான் வரதட்சனை ஒழியும்" என்று தீர்மானமாக கூறினாள் ஸ்வேத்தா.


------------------------------------(தொடரும்)-------------------------------------------------

Saturday, May 16, 2009

தமிழனுக்கு நியாபக மறதியோ?

இந்த பொதுத்தேர்தலில் ஓட்டுப்பேடும் வரை நெஞ்சில் நெரிஞ்சி முள்ளாய் உருத்திய இலங்கை தமிழனின் துயர்கள் ஓட்டுப்போடும் போது நம் தமிழனின் மனதிலிருந்து சுவடின்றி மறைந்துவிட்டனவோ?...தமிழனுக்கு அந்நேரம் மட்டும் நியாபகமறதி வந்துவிட்டதோ?...

ஒருவேலை, இலங்கை தமிழனின் துயர்களை பற்றி யோசிப்பதை காட்டிலும் தத்தம் வாழ்க்கையும் , நம் நாடும் மட்டுமே முக்கியம் என்றெண்ணும் சுயநலவாதிகளாய் மறிவிட்டனரா?...

இல்லை ; என்னால் நம் தன்மானம்மிக்க தமிழனை சுயநலவாதிகளாய் நினைக்க முடியவில்லை...நிச்சையம் தமிழனுக்கு நியாபக மறதியாகத்தான் இருக்க வேண்டும்.

2009 பொதுத்தேர்தல்

என்னப்பா நடக்குது இங்க????

தோற்றுவிட்டார்னு சொல்லுறாங்க, ஒருமணி நேரம் கழித்து அதே வேட்பாளர் வெற்றி பெற்றார்னு சொல்றாங்க.....ஒரு இடத்துல என்னன்னா மொத்த வாக்குகளைவிட 25,000 வாக்குகள் அதிகமாக பதிவாகி உள்ளதுனு சொல்லுறாங்க....என்னதான் நடக்குது இங்க???....யாருக்காவது புரிந்தால் எனக்குக் கொஞ்சம் சபீனா போட்டு விளக்குங்க பிலீஸ்..

Sunday, April 12, 2009

செருப்பு சேற்றில் சிக்கிய கதை - 2

ஒரு 4.30 மணிக்கா ஏரிக்கரைக்கு பேசிகிட்டே நடந்து போனோம். அது கோடை காலம் என்பதால் ஏரியில தண்ணி கொஞ்சமாதான் இருந்தது. ஓரத்துல எல்லாம் தண்ணீர் வற்றி நடுவுல மட்டும் ஒரு குளம் அளவு தண்ணீர் இருந்தது. ஓரத்தில் தண்ணீர் இருந்து வற்றிய இடங்களிலெல்லாம் பூமி பெரிது பெரிதாக விரிசல் கொண்டு வறட்சி காலங்களில் காணப்படுகிற மாதிரி காட்சியளித்தது.



நாங்கள் ஏரியை நெருங்கி தண்ணீரைக் கண்டதும் எங்களுக்கு ஒரே சந்தோஷம், அதோடு நம்மல கட்டுபடுத்த யாருமில்லை என்ற சுதந்திர உணர்ச்சியும் சேர்ந்துகொண்டு எங்களுக்குள் உற்சாகம் பொங்களோ பொங்கள்னு கூவாத குறையா பொங்கி வழிய, ஓட்டமும் நடையுமா தண்ணீ்ரை நோக்கி வேகமாய் போனோம். எங்களுக்கெல்லாம் முன்னாடி போன என் தம்பி, பாவம் சின்னப்பையன், சந்தோஷத்தக் கட்டுப்படுத்தத் தெரியாம 'ஏஏஏஏஏஏஏஏஏஏ....' கத்திகிட்டே எக்ஸ்பிரஸ் வேகத்துல தண்ணீரை நோக்கி வேகமா ஓடினான். நாங்க அந்த தண்ணீரை சுற்றியுள்ள , வற்றிப்போய் விரிசல் விட்டிருந்த வறண்ட பூமியின் மீது காலை வைத்து இரண்டடி போனதும்தான் தெரிந்தது, அந்த விரிசல்கொண்ட வறண்ட மேல் பரப்புக்குக்கீழே எல்லாம் வெரும் சேறு என்பது. அந்த சேற்றினுள் எங்கள் கால்கள் மெதுவாக உள்வாங்க ஆரம்பிக்கவே, நாங்கள் அப்படியே முன்னேராமல் நின்றுவிட்டோம் ; அப்படியே திரும்பி வெலியே வந்த பிரகுதான் பார்த்தோம் என் அருமை உடன்பிறப்பு சேற்றுக்குள் வசமாக மாட்டிக்கொண்டதை .




நாங்கள் எல்லோரும் கட்டுப்படுத்தக்கூடுய வேகத்துல வந்ததுனால சேற்றில் கால் உள்வாங்க ஆரம்பிச்சதுமே ஒரு சடன் பிரேக்கப்போட்டு அப்படியே ரிவீட்டடுச்சு கரைக்கு ஓடி வந்துட்டோம்; ஆனா என் தம்பி பாவம் , சாரு வந்த ஸ்பீடுக்கு கண்ட்ரோல் பண்ண முடியாம ரொம்ப தூரம் சேற்றுக்குள்ள ஓடினப்புறம்தான் அவரால பிரேக்கு போட முடிந்தது. அவன் போய் நின்ன இடம் இருக்கே உங்க வீட்டு சேறு எங்க வீட்டு சேறு இல்ல, சும்மா புதர்குழி மாதிரி இருந்தது. ஐயா பிரேக்கு அடிச்சு திரும்பலாம்னு பார்க்கறதுக்குள்ள கால் முட்டி அளவு சேத்துல உள்வாங்கிடுச்சு.




நாங்க எல்லோரும் வெலியில் இருந்து "ஆனந்த், அப்படியே பொருமையா ஒரு ஒரு அடியா எடுத்து வச்சு சேற்றிலிருந்து வெளிய வாடா"னு சொல்ல, அவனும் அந்த புதர்குழியிலிருந்து வெலியில வந்தான். சேற்றோடு போராடி தட்டுத்தடுமாரி அவன் வெலியில் வருவதை பார்க்கப் பார்க்க எங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பு. அவனுக்கோ இப்படி திடீர்னு முட்டி அளவு சேற்றுல போய் மாட்டிகிட்டது பெரிய அதிர்ச்சி, ஐய்யா முகத்துல ஈ ஆடல. புள்ள பாவம் 'புதர்குழியில மாட்டிகிட்டோமோனு ' நல்லா பயந்துட்டான்.



அவன் வெலியில வந்ததும் "சரி வாடா வீட்டுக்கு போகலாம்"னு நாங்க கூப்பிட்டதுதான் தாமதம், உடனே "ஓஓஓஓஓஓஓஓ....ஓ" னு அழறான்,"ஏன்டா"னு கேட்டா "என் செருப்பு சேத்துல மாட்டிகிச்சு"னு அவன் அழுதுகிட்டே சொன்னதும்தான் நாங்க கவனிச்சோம் அவனுடைய ஒரு காலுலதான் செருப்பு இருக்கு இன்னொரு காலுல செருப்பு இல்ல. எல்லோரும் அவனை பார்த்து சிரிச்சது அவனுக்கு அவமானமா போச்சு அதுல செருப்புவேறு காணுமென்றதும் அவனுக்கு அழுகாச்சி அழுகாச்சியா வந்துடிச்சி (ஆறாவது படிச்சாலும் அவன் பச்சக்குழந்தை அப்போ, இப்ப ஊரையே வித்திடுவான்). எங்களிடையே கொஞ்சம் அடங்கியிருந்த சிரிப்பு அவன் செருப்புக்காக அழுவதை பார்த்ததும் அடக்க முடியாம பீரிட்டுவந்து அவன் அழுகையை இன்னும் அதிகமாக்கியது.


இந்த படத்தில் இருக்கும் இரண்டு வயது குழந்தைதான் என் தம்பி


தற்காலிகமாய் என் சிரிப்பை நிருத்திவிட்டு "போனா போயிட்டு போது வாடா போகலாம்" என்றேன்.அவனோ "முடியாது" "இதுதான் கடைசி, இனி தொலச்சா வேற செருப்பு வாங்கித்தரமாட்டேன்னு டாடி சொல்லிருக்காரு" என்று அழுதுகிட்டே சொன்னான் (அவன் சின்ன வயசுல வாரம் ஒரு செருப்பு தொலைப்பான். அதனால சும்மா எங்க அப்பா இப்படி அவன மிரட்டுவார்."இவனுக்கு செருப்பு வாங்கித்தந்தே என் சொத்து அழிஞ்சிடும்போலருக்கே"னு எங்க அப்பா புலம்பனது இன்னும் எனக்கு நினைவு இருக்கு)


இப்படி அவன் சொன்னதைக்கேட்டு எனக்கு மீண்டும் சிரிப்பு வர அவன் அழுகை இன்னும் அதிகரிச்சிது. நாங்கள் சிரிப்பதையும் என் தம்பி மட்டும் அழுவதையும் ஏரிக்கரை மேல் நடந்து போய்கிட்டு இருந்த இரு ஊர்காரப் பெண்கள் பார்த்துவிட்டு "ஏன் தம்பி அழர"னு கேட்க அவனும் சொன்னான். உடனே அவங்க அந்த கும்பல்ல கொஞ்சம் பெரிய பிள்ளைகளா தெரிஞ்ச என்னையும் அரசியையும் பார்த்து "ஏம்மா, அந்த பிள்ளையோட செருப்ப எடுத்துத்தாங்களேன், அத விட்டு புட்டு ஏன் இப்படி சிரிச்சிட்டிருக்கீங்க"னு போகிற போக்குல சொல்லிட்டு போனாங்க.

அப்பவும் எங்க சிரிப்பு அடங்கினபாடில்ல. அப்புறம் ஒரு வழியா சிரிச்சு முடிச்சிட்டு நாங்க எல்லோரும் என் அருமை தம்பியோட செருப்ப தேடுறபணிய முன்னிட்டு கையில ஒரு குச்சோட சேத்துல இறங்கினோம். நாங்க கலத்துல இறங்கிறதுக்கு முன்னாடியாவது சேத்துல என் தம்பியோட கால்தடம் மட்டும்தான் இருந்தது, நாங்க இறங்கினதுக்கப்புறம் சேத்துல எங்கு பார்த்தாலும் ஒரே கால் தடங்கள், அதுவும் பெரிய பெரிய குழிகளா கால் தடங்கள் தெரிஞ்சுது. எந்த குழிக்குள்ள செருப்பு இருக்குதுனே தெரியல. கொஞ்ச நேரம் கால் தடங்கள் சேற்றில் ஏற்படுத்திய குழிகளில் குச்சைவிட்டுத்தேடியும் செருப்பு கிடைக்காத எரிச்சலில் என் தம்பியிடம் "ஏன்டா மடையா,செருப்புதான் மாட்டிகிச்சினு தெரியுமில்ல, செருப்ப விட்டுட்டு கால மட்டும் ஏன்டா வெலியில எடுத்த; காலோட செருப்பையும் சேத்து எடுக்க வேண்டியதுதான" என்று அவனை ஒரு ஏறு ஏறினேன்.

இதற்குள் தனக்காக எல்லோரும் சேற்றில் இறங்கி செருப்பு தேடுகிறார்கள் என்று சமாதானம் ஆகி அழுகையை நிருத்திய என் தம்பி என்னுனைய அர்ச்சனையை வாங்கிக்கொண்டு பேந்த பேந்த விழித்தான் ( இப்ப நான் இப்படி எல்லாம் திட்டினா "சரிதான் போடி"னு சொல்லிட்டு போயிடுவான் )
{எப்பவும் அவனுக்கு நீண்ட நீர்பரப்பு மேல் ஒரு மயக்கம். பாருங்க எப்படி உல்லாசமா கடற்கரையில டைடானிக் போஸ் கொடுத்துகிட்டு நிற்கிறான் ( இது சமிபத்தில் எடுத்த படம் ) }
எப்பவும் கூட கூட பேசி வாயடிக்கிற என் தம்பி இப்படி விழிப்பதை பார்த்து எனக்கே பாவமாய் போயிடுச்சு."சரி வாடா, இந்த செருப்பு போனா போயிட்டு போகுது, டாடி கிட்ட சொல்லி உனக்கு வேற செருப்பு வாங்கித்தருவது என் பொருப்பு, நீ கவலை படாதடா"னு நான் அவனை தேற்ற அவனும் சரி வீட்டுக்கு போகலாம்னு ஒத்துகிட்டான். அப்புறம் பக்கத்துல ஒரு குழாய் தண்ணியில கை, கால கழுவிவிட்டு வீடு போய் சேர்ந்தோம்.
இவ்வளவு நாள் கழிச்சு இன்னமும் நாங்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து பேச ஆரம்பிச்சோம்னா இந்த கதைய பத்தி பேசி என் தம்பிய ஓட்டித்தல்லாம இருக்கவே மாட்டோம்.